Yasmin Travels John Mark

Yasmin Travels John Mark Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yasmin Travels John Mark, Tenkasi Road, Kadayanallur.

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
10/10/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

18/07/2023

கழுதைகளுடன் வாக்குவாதம் செய்யாதே:

கழுதை புலியிடம் கூறியது:
"புல்லின் நிறம் நீலம்".
புலி பதிலளித்தது:
"இல்லை, புல் பச்சை நிறம்."

விவாதம் சூடுபிடித்தது, வாக்குவாதம் முற்றியது. இருவரும் தலைவரிடம் இந்த பிரச்சனையை கொண்டு செல்ல முடிவு செய்தனர், இதற்காக அவர்கள் காட்டின் ராஜாவான சிங்கத்தின் முன் சென்றனர்.

சிங்கம் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தது. அருகில் சென்ற, கழுதை கத்த ஆரம்பித்தது:
- "தலைவரே, புல் புல்லின் நிறம் நீளம் என்பது உண்மைதானே?".
சிங்கம் பதிலளித்தது:
- "உண்மை, புல் நீல நிறம் உடையது."

கழுதை மேலும் தொடர்ந்தது:
- "புலி நான் சொல்வதை மறுக்கிறது. எனது கருத்தில் முரண்படுகிறது. இது என்னை எரிச்சலூட்டுகிறது, தயவுசெய்து அவரை தண்டிக்கவும்."

பின்னர் மன்னர் சிங்கம் அறிவித்தது.
- "புலிக்கு 5 ஆண்டுகள் மௌன விரத தண்டனை விதிக்கப்படுகிறது."

கழுதை மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து, தன் வழியில் சொல்லிக் கொண்டே சென்றது, மீண்டும் மீண்டும்: "புல் நீல நிறம் "

புலி தனது தண்டனையை ஏற்றுக்கொண்டது, ஆனால் அது சிங்கத்திடம் கேட்டது:
"அரசே, நீங்கள் ஏன் என்னைத் தண்டித்தீர்கள்?, புல் பச்சையாகத் தானே இருக்கிறது."

சிங்கம் பதிலளித்தது:
"உண்மையில், புல் பச்சைதான் ."
புலி கேட்டது:
"அப்படியானால் என்னை ஏன் தண்டிக்கிறீர்கள்?".

சிங்கம் பதிலளித்தது:
"புல் நீலமா அல்லது பச்சையா என்பது இங்கு முக்கியமில்லை.
கழுதையுடன் வாதிட்டு நேரத்தை வீணடிப்பதும், அதற்கு மேல் அந்தக் கேள்வியால் என்னைத் தொந்தரவு செய்வதும் உன்னைப் போன்ற துணிச்சலான புத்திசாலித்தனமான ஒரு பிறவிக்கு தேவையில்லாத விஷயம் என்பதால்தான் உனக்கு இந்த தண்டனை."

உண்மை அல்லது யதார்த்தத்தைப் பற்றி கவலைப்படாத முட்டாள் மற்றும் அறிவீனமானவருடன் வாதிடுவது நேரத்தை வீணடிப்பதாகும், அர்த்தமில்லாத விவாதங்களில் நேரத்தை வீணடிக்காதீர்கள்...

எவ்வளவோ உண்மைகளையும், ஆதாரங்களையும் நாம் முன்வைத்தாலும், புரிந்துகொள்ளும் திறனில் இல்லாதவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் ஈகோ, வெறுப்பு, வெறுப்பு ஆகியவற்றால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள், அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் சரியாக இருக்க வேண்டும்.

அறியாமை அலறும்போது, புத்திசாலித்தனம் அமைதியாக இருக்கும்.

வாழ்த்துக்கள் நண்பர்களே.

mark jahan travels market ticket service service service visa stamping ticket corruption force #

05/07/2023

வாழ்க்கையில் வெற்றி பெற 6 ரகசியங்கள்:

1.உங்கள் திட்டங்களை மக்களிடம் பகிர்வதை நிறுத்துங்கள்.
நீங்கள் அதிகமாக உங்கள் செயல்களை பற்றி மற்றவர்களிடம் பகிரும்போது, உங்கள் சொந்த முன்னேற்றத்தை நீங்களே தடுக்கிறீர்கள். விஷயங்களை தனிப்பட்ட முறையில் வைத்து வெற்றி பெறுங்கள்.

2.எப்போது வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வலிமையானவர்கள் மற்றவர்களை மகிழ்விப்பதற்கு முன்பு தங்கள் சொந்த நலனை முக்கியமாக கருதுவார்கள். தேவைப்பட்டால் வேண்டாம் என்று சொல்லிப் பழகுங்கள்.

3. ஒரு முடிவை எடுங்கள், அதில் உறுதியாக நில்லுங்கள்.
மக்கள் ஒழுக்கம் இல்லாமல் தங்கள் நச்சு வடிவங்களுக்கு இடம் கொடுக்கிறார்கள். நேர்மறையாக உங்களை மாற்றுவதற்கான முடிவை எடுங்கள், அதில் உறுதியாக நில்லுங்கள்.

4. எண்களுக்கு மிகப் பெரிய சக்தி உள்ளது.
வாழ்க்கையில் யாரும் எதையும் தாங்களாகவே உருவாக்கவில்லை. உங்களை மேம்படுத்தும் மற்றும் ஆதரிக்கும் ஒரு வட்டம் உங்களுக்குத் தேவை. தனி ஓநாயாக இருப்பதை நிறுத்துங்கள்.

5. உங்கள் கவனச்சிதறல்களுக்கு பட்டினி போடுங்கள், உங்கள் கவனத்தை திடப்படுத்துங்கள்.
தேவை இல்லாத விஷயங்களுக்கு பதிலாக உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் நினைத்த எதையும் சாதிப்பீர்கள்.

6. எப்போதும் மற்றவர்களுக்கு மதிப்பை வழங்குங்கள்.
வெற்றிக்கு ஒரே ஒரு ரகசியம் உள்ளது: மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது. வணிகம் மற்றும் உறவுகளில், மதிப்பை வழங்குவது நீங்கள் அவர்களின் முதல் முன்னுரிமையாக இருப்பீர்கள்.

கொஞ்சம் காது கொடுங்கள் பெண்களே,,
நண்பர்களே உங்களுக்கும்தான்... 💜

பெண்களே,, நீங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிர்பந்தமில்லை, நீங்கள் ஒரு சூப்பர் அம்மாவாக, ஒரு சூப்பர் மனைவியாக, ஒரு சூப்பர் தொழிலாளியாக, ஒரு சூப்பர் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதில்லை.. ஏனென்றால் சில ஆண்டுகளில் உங்கள் உடல் தொய்வடையும்போது, எலும்புகள் தேயும்போது, நீங்கள் வலுவிழக்கும் போது ​​நீங்கள் செய்ததை எல்லாம் நினைவில் வைத்திருப்பவர்கள் ஒரு சிலரே. அனைத்தையும் செய்தது நீங்கள்தான் என்ற நன்றி திருப்பி செலுத்தப்படுமா என்பது சந்தேகமே..

இந்த உலகம் "இது இவளின் கடமை" என்கிற ஒன்றை வரியில் உங்களிடம் நன்றி மறக்கும்.

எனவே வீட்டை விட்டு சிறிது வெளியேறுங்கள், பயணம் செய்யுங்கள், காலார நடங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள். பூங்காவிற்குச் செல்லுங்கள், ஜிம்மிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு பிடித்தத்தைச் சாப்பிடுங்கள், உங்கள் உடல் நிலையை கவனியுங்கள். ஆழ்ந்து தூங்குங்கள், நீங்கள் விரும்பும் ஆடைகளை அணியுங்கள், நீங்களாக இருங்கள், உங்களை கவனித்துக் கொள்ளுங்கள், உங்களை நேசியுங்கள், சில சமயங்களில், முடியாது, வேண்டாம், மாட்டேன், என்று சொல்லி பழகுங்கள், வாழ்க்கையில் உங்களுக்காக பிரத்தியேகமாக சிலவற்றையாவது செய்யுங்கள்!!

குழந்தைகள் வளர்ந்து வெளியேறிவிடுவார்கள், கணவர்கள் எப்போதும் வீடு தங்க மாட்டார்கள், மீண்டும், மீண்டும் வேலைகள் உங்களை எளிதாக வேலைக்காரியாக மாற்றும், வீடு மீண்டும் அழுக்காகும், அடுப்பு மீண்டும் அழைக்கும். அழுக்குத் துணிகள் காத்திருக்கும். ஆனால் இதையெல்லாம் தாண்டி உங்கள் உணர்ச்சிகளும், ஆரோக்கியமும் முக்கியமானது, உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பும், இரண்டாவது வாழ்க்கையும் இங்கு கிடையாது.

மற்றவர்களை போலவே பெண்களே,, உங்களுக்கும் ஒரே வாழ்க்கைதான், கொஞ்சம் வாழுங்கள்.
உங்களுக்கு என் வாழ்த்துக்கள். ✌🏼❤️😀

02/07/2023

🏆⏳நேரத்தின் பாடம்!

• ஒருவர் 22 வயதில் பட்டம் பெற்றார், ஆனால் ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்கு 5 ஆண்டுகள் காத்திருந்தார்.

• ஒருவர் 25 வயதில் CEO ஆனார், ஆனால் 30 வயதில் இறந்து போனார்.

• மற்றொருவர் 50 வயதில் CEO ஆனார், 80 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.

• ஒருவர் இன்னும் தனிமையில் இருக்கிறார், அவருடைய பள்ளிக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தாத்தாவாகிவிட்டார்.

• ஒபாமா 55 வயதில் ஓய்வு பெற்றார், ஆனால் டிரம்ப் 70 இல் வெற்றியை தொடங்கினார்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் நேரத்தின் அடிப்படையில் செயல்படுகிறார்கள்.

உங்களைச் சுற்றி இருப்பவர்களில் சிலர் உங்களை விட முன்னால் இருப்பதாகவும், சிலர் உங்களுக்குப் பின்னால்
இருப்பதாகவும் தோன்றலாம்.

ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கான நேரத்தில், தங்கள் சொந்த பாதையில் ஓடுகிறார்கள்.

அவர்களிடம் பொறாமை கொள்ளாதீர்கள்.

அவர்கள் தங்கள் நேரத்தின் பிடியில் இருக்கிறார்கள், நீங்கள் உங்கள் நேரத்தின் பிடியில் இருக்கிறீர்கள்.
கவலைப்படாதீர்கள்.

நீங்கள் தாமதிக்கவும் இல்லை.
நீங்கள் சீக்கிரம் வரவும் வரவில்லை.

நீங்கள் உங்களுக்கான மிகவும் சரியான நேரத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் விரும்பிய வாழ்க்கை இலக்குகளை அடைவீர்கள்.

பதட்டப்படாமல் சிறிது சிறிதாக முன்னேறுங்கள்.
வெற்றி வாசல் தானாய் திறக்கும்.

https://www.facebook.com/100063952300816/posts/685497883591949/?mibextid=Nif5oz
02/07/2023

https://www.facebook.com/100063952300816/posts/685497883591949/?mibextid=Nif5oz

துபாயின் அடையாளமாக இருந்த சாலை இனி அந்த பெயரை இழக்கும்... வரலாற்று பக்கங்களில் மட்டுமே இனி அதனை காண முடியும்!-importan...

12/06/2023

🌷 ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.

🌷 "இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!"

🌷 மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

🌷 இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.

🌷 ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்..

🌷 ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’

🌷 இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.

🌷 ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,

🌷 ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’

🌷 வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது.

🌷 டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.

🌷 நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்.

🌷 ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’

🌷 எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!!

06/06/2023

பசியோடு ஒரு திருமண வரவேற்பு பந்தியில் அமர்ந்திருந்தேன்.

முதலில் பேப்பர் ரோலை உருட்டினார்கள் .

பின்பு இலைகளை முன்னே வைத்து சென்றார்கள்.

கால் மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் மட்டும் வைத்தார்கள். 😀😀😀

முதல் பந்தியே ஆரம்பிக்கவில்லை

அதற்குள் தி.நகர் போன்று கூட்டம் நெறிய ஆரம்பித்தது.😀😀😀

நான் ஓர வரிசையில் அமர்ந்திருந்தேன்.

காத்திருப்பவர்கள் எனக்கு பின்னால் வந்து நிற்க ஆரம்பித்தார்கள் .

" வெறும் எலைய எம்மா நேரம்டா உத்து பாக்கறது ..

சோத்த போடுங்கடா.." 😀😀😀

சரக்கிலிருந்த பெருசு ஒன்று ஆரம்பித்து வைத்தது .

குலாப் ஜாமூன் , வெங்காய பச்சடி , உருளை சிப்ஸ் , வைத்த அடுத்த நொடியில் கபளீகரம் செய்தேன்.

என்னுடைய வரிசையில் கடைசி ஆள் வரை வைத்துவிட்டு திரும்பிய வெங்காய பச்சடிக்காரன் ,

என்னைப் பார்த்து " பச்சடியைக் கூடமாடா ..?" என்று மனதில் நினைத்தது அவன் முகத்தில் தெரிந்தது.

அடுத்தது சென்னாவும் , தேங்காய் சட்னியும் , வைத்தார்கள் .😀😀😀

" எப்பதாண்டா சோறு போடுவீங்க ..? " 😀😀😀

மறுபடி பெருசு உருமியது.

" சார் தோசையும் சப்பாத்தியும் வந்துட்டே இருக்கு ..

அது வரைக்கும் அப்பளம் சாப்ட்ரீங்களா ..?" 😀😀😀

அப்பளம் வைத்திருந்தவன் நக்கல் செய்கிறானா , இல்லை மனதில் இருந்துதான் கேட்கிறானா போன்ற ஆராய்ச்சிகளில் இறங்க என் பசி அனுமதிக்கவில்லை. இதோ வருகிறது அதோ வருகிறது என்று அவர்கள் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த சப்பாத்தியும் தோசையும் வந்தே விட்டது .

படுபாவிகள், எதிர் வரிசையில் வைக்க ஆரம்பித்தனர்.

எனது இடத்திற்கு வரும்பொழுது தோசை தீர்ந்துவிட்டது.

ஒரே ஒரு சப்பாத்தி வைத்தான்.

" தம்பி தோசை வரல .."😀😀😀

" நான் சப்பாத்தி வைக்கிற ஆளு சார் .."😀😀😀

" தெரியுதுப்பா ..

அவர்கிட்ட சொல்ல முடியாதா ..?"😀😀😀

" உள்ள இருப்பான் சார் ..

போனதும் சொல்றேன் .."

அவர் மீட்டிங்கில் இருக்கார் இப்போ பார்க்க முடியாது என்று என் காதில் விழுந்தது .

அதற்குள் சாப்பாடு வைக்க ஆரம்பித்தார்கள்.

" பாஸ் ஒரு கரண்டி வைங்க சாப்டுட்டு பொறவு வாங்கிக்கிறேன் " எனக்கு இலையில் டிராபிக் ஜாம் ஆனால் பிடிக்காது என்பதால் அப்படி சொன்னேன்.😀😀😀

" தம்பி அதெல்லாம் வேலைக்கு ஆகாது ,

இப்பவே மொத்தமா வாங்கிக்கங்க ..

அப்புறம் இவங்கள பிடிக்க முடியாது ..

" பக்கத்தில் இருந்த அனுபவஸ்தர் கூறினார்.

அவர் கூறியபடியே மொத்தமாக வாங்கி , சாம்பார் , வத்தக்குழம்பு , ரசம் , மோருக்கு என நான்கு பாகங்களாக பிரித்து வைத்தேன். 😀😀😀

எனக்கு பின்னால் வெயிட்டிங்கில் இருந்தவர் அருகில் இருந்தவரிடம் எதோ சொல்லி சிரித்தார்.

அநேகமாக , டாப் ஆங்கிளில் எனது இலையில் நான்கு மலைச் சிகரங்கள் தெரிந்திருக்க வேண்டும் அவருக்கு.

சாம்பார் வாளிக்கு பின்னாலயே ரசம் வாளியும் வந்தது. " இப்படி வந்தா ஒன்னு சேர வந்துட்றீங்க

இல்லனா

ஆளே காணாம போயிடுறீங்க ..

சாம்பார் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள

எப்படிப்பா ரசம் சாப்பிடறது ..?"

" சாப்பிடலாம் ..

சாப்பிடலாம் ..

" எவனோ பின்னாடி இருந்து குரல் கொடுத்தான். திரும்பிப் பார்த்தேன், யாரென்று கண்டு பிடிக்க முடியவில்லை.😀😀😀

" தம்பி, புரியாத ஆளா இருக்கீங்களே ..

ரசத்த இப்பவே வாங்கி வச்சுக்கோங்க .." 😀😀😀

அனுபவஸ்தர் வலியுறுத்தினார். ரசத்துக்கு என குவித்து வைத்திருந்த குன்றில் ஒரு குழி வெட்டி ரசத்தை அதில் ஊற்றச் சொன்னேன்.

" வத்தக் குழம்பு இல்லையா ..?"

" வரும் சார் ..

" 'ஏன் பறக்குறீங்க' என்று கழுத்து வரை வந்து விட்ட வார்த்தையை நல்லவேளை முழுங்கிவிட்டான்.

" தம்பி உங்க ரசம் நம்ம இலைக்கு வருது பாருங்க "

அருகில் இருந்தவர் சிரித்தபடி கூறினாலும் அது சிரிப்பதற்காகக் கூறியது அல்ல. 😀😀😀

இதற்கு உடனடியாக ஆக்ஷனில் இறங்கியாக வேண்டும்.

மோர் குன்றில் இருந்து கொத்தாக சோற்றை அள்ளி, ரசம் லீக் ஆகும் இடத்தை சுற்றி ஒரு டேம் கட்டினேன் . அவருக்கு பரம திருப்தி.

அடுத்து திடீரென்று காபி வைத்தார்கள் .

" இன்னும் ரசத்த கூட தாண்டலயேப்பா ..

அதுக்குள்ள காபி வச்சா என்ன அர்த்தம் ?"

" சீக்கிரம் முடிச்சுட்டு எந்திரிக்கனும்னு அர்த்தம் .." 😀😀😀

மீண்டும் அதே குரல் பின்னாலிருந்து. காபியை ஆறிப் போய் குடிப்பதும் ,

குப்பையில் வீசுவதும் ஒன்று. காபியை இழக்க எனக்கு மனமில்லை.

ரசம் சாப்பிட்டுகொண்டே ,

நடு நடுவே காபியையும் ஒரு சிப் இழுத்துகொண்டேன்.

புது காம்பினேஷன்.

நீங்களும் டிரை பண்ணுங்க மக்கா.😀😀😀

" இவன் இப்பத்தைக்கு முடிக்க மாட்டான் மாப்ள ..

வா அந்த லைனுக்கு போவோம் ..

" அந்த இரண்டு பேர் இறுதியாக என்னிடம் தோற்று வெளியேறினார்கள்.

அடுத்து மோர் வந்தது. வாங்கி பிசைய ஆரம்பித்தேன்.

என் வரிசையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக இலையை மூடி எழ ஆரம்பித்தனர்.

இறுதியாக எனக்கு மிகவும் பிடித்த வத்தக் குழம்பும் வந்தது.

இப்போது அநேகமாக அனைவரும் எழுந்து விட்டனர் ,

என் அருகில் அனைவரும் புது முகங்கள்.😀😀😀

ஆயம்மா பேப்பர் ரோலை சுருட்டிக் கொண்டே வந்தார்.

பாதி குன்றுதான் நான் முடித்திருந்தேன்.

என் அருகில் வந்ததும் ,

" பரவாயில்லை முடிங்க சார் " என்று கருணை கூர்ந்தார் .

பரீட்சை ஹாலில் கறாராக பேப்பரைப் பிடுங்கும் ஆசிரியப் பெருமக்களே ,

ஆயம்மாவைப் பார்த்து படியுங்கள். 😀😀😀

வரிசையில் அமர்ந்திருந்த புது முகங்கள் அனைவரும் என்னைக் குரூரமாக பார்க்க ஆரம்பித்தனர்.

எனக்கு வெட்கமாய்ப் போய் விட்டது .

மீதமிருக்கும் வத்தக் குழம்புக் குன்றை பிரிய மனமில்லாமல் ,வாழைப் பழத்தை மேல் ஜோப்பில் போட்டுக்கொண்டு ,

இலையை மூடிவிட்டு

ஒரு கையில் ஐஸ் கிரீம் மறு கையில் ஜாங்கிரியுடன் நான் எழ முற்பட்டபோது

" சார் ..

இங்க யாருக்கோ தோச வரலயாமே .. 😀😀😀

உங்களுக்கா ? " என்ற குரல் உசுப்பேத்தியது.

அமர்ந்தால் அடி விழும் என்று தெரிந்ததால்,

" நான் இல்லப்பா ..😀😀😀

" என்று கூறிவிட்டு கை கழுவ சென்றேன்......

02/06/2023

Address

Tenkasi Road
Kadayanallur
627751

Alerts

Be the first to know and let us send you an email when Yasmin Travels John Mark posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yasmin Travels John Mark:

Share