15/09/2020
திருவாரூரில் சில உதிரிகள் குழு அமைக்கும் வரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இயக்கப்படும் ரயில்கள் குறித்து எவ்வித அபிராயபேதமும் இருந்ததில்லை. அதற்கு முன்னர் நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த பேரா. பிறையழகன், வர்த்தகர் சங்கத்தின் திரு. கிரிதரன், அரிமா சங்கத்தின் திரு.பன்னீர்செல்வம் சிறுதொழில் சங்கத்தின் திரு.கருணை ஜமால், திரு.ரவிச்சந்திரன், Jc சீனுவாசன் போன்றவர்கள் திருவாரூர் பகுதியின் ரயில் தேவைகள் குறித்துஅவ்வப்போது ரயில்வே துறைக்கு தெரிவித்து சேவைகளை பெற்று வந்துள்ளனர். அவர்கள் கோரிக்கைகள் மிகவும் நியாயமானதாகவும், திருவாரூர் பகுதிக்கு பலனளிப்பதாகவும் இருந்ததால் அனைவரின் ஆதரவும் கிடைக்கப்பெற்றது. அகல ரயில் பாதை, மின்மயமாக்கல், கம்பன் ரயில் இயக்கம், எர்ணாகுளம் ரயில் நீட்டிப்பு, திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை மாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை பாங்குடன் முன்வைத்து அவர்கள் நிறைவேற்றியுள்ளனர் என்றால் மிகையாகாது. அப்போதெல்லாம் எந்த சண்டையும் சச்சரவும் கிடையாது. ஆனால், தற்போதுள்ள ரயில் உபயோகிப்பாளர்கள் குழு தங்கள் ஊருக்கு என்ன தேவை என்பதை விட அடுத்த ஊர் வழியாக செல்லும் எந்த ரயிலை கெடுக்கலாம் என்ற நோக்கத்தில் செயல்படுவதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. குழாயடி சண்டை அவர்களை தவிர வேறு யாரும் போடுவதில்லை. தமிழகத்தில் பல்வேறு பல்வேறு பகுதியில் உள்ள பிற பயணிகள் சங்கங்கள் இதுபோல் அநாகரிகமாக எப்போதாவது சண்டை போட்டுக்கொள்கின்றனரா? இல்லையே. திருவாரூர் சங்கத்தினர் அண்டை மாவட்டத்துடன் மட்டுமே சண்டை போடுகிறார்களா? இல்லையே ! ராமேஸ்வரம், புனலூர், தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி என இவர்களின் சண்டை பட்டியல் மிக நீளமானது. செங்கோட்டை அந்த்யோதயா தொடங்கி போட் மெயில், செந்தூர், புதுசேரி-குமரி என தொடர்ந்து இப்போது கோவை ஜனசதாப்தி வரை இவர்களது மாற்றி இயக்க கோரிக்கை பட்டியல் மிக நீளமானது
மற்றும் தேவையில்லாத கோரிக்கை.
கோவை வழியாக இயங்கும் மங்களூர்- சென்னை எழும்பூர் ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு , கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து , திருச்சி விருதாச்சலம், , விழுப்புரம் போன்ற இடங்களுக்கு நேரடி தொடர்பு கொடுக்கிறது. அந்த ரயிலை பொள்ளாச்சி வழியாக மாற்றி இயக்க கோரினால் நீங்கள் உடன்படுவீர்களா?
புதியதாக எங்கே எந்த ரயில் யார் இயக்க கேட்டாலும் அதை திருவாரூர் வழியாக இயக்க கோரும் கீழ்த்தரமான எண்ணம்; கோரிக்கையின் நியாயமற்றதன்மையை கூறினால் அவர்களுடன் சண்டை.; இதெல்லாம் திருவாரூரை தவிர வேறெங்கும் பார்க்க முடியுமா?
கொடுமை என்னவென்றால், திருவாரூரில் இருந்து சென்னைக்கு 3 ரயில்களும், மும்பை, வாஸ்கோடகாமா, திருப்பதி, எர்ணாகுளம், பெங்களூரு போன்ற இடங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. ஆனால் திருவாரூர் சங்கத்தினரின் முரண்பாடான நடவடிக்கைகளினால் 11 ஆண்டுகள் ரயில் வசதியின்றி தவிக்கும் திருத்துறைப்பூண்டி, அதிராமப்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பல ஊர்காரர்கள் தாங்கள் முன்பு பயன்படுத்திய ரயில் வசதிகள் கூட கிடைக்கப்பெறாமல் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் மிச்சம்.